காதல் சோகம்
மலரே நீ ஏன் மறந்தாயோ
மலர நீ ஏன் மறுத்தாயோ
மலரும் உன் முகம் காணாது
மலருமோ ஏன் முகம், மலராது
தனியே கிடந்து அழுதிட்டேன்
தன்துயர் நானும் எழுதிட்டேன்
என்கதை சொல்லி முடித்திட்டேன்
உன்பதில் காண துடித்திட்டேன்
சோக நாளும் செல்லாதோ? - சுக
ராகம் நெஞ்சில் மலராதோ? - கரு
மேகம் விலகி செல்லாதோ? - நிலவு
முகம் மீண்டும் தோன்றாதோ?
உந்தன் முடிவை சொல்லிவிடு
என்நெஞ்சின் துயரம் அள்ளிஎடு
இல்லை யென்றால் சொல்லிவிடு;
நீயே வந்து கொள்ளியிடு
மலரே நீ ஏன் மறந்தாயோ
மலர நீ ஏன் மறுத்தாயோ
மலரும் உன் முகம் காணாது
மலருமோ ஏன் முகம், மலராது
தனியே கிடந்து அழுதிட்டேன்
தன்துயர் நானும் எழுதிட்டேன்
என்கதை சொல்லி முடித்திட்டேன்
உன்பதில் காண துடித்திட்டேன்
சோக நாளும் செல்லாதோ? - சுக
ராகம் நெஞ்சில் மலராதோ? - கரு
மேகம் விலகி செல்லாதோ? - நிலவு
முகம் மீண்டும் தோன்றாதோ?
உந்தன் முடிவை சொல்லிவிடு
என்நெஞ்சின் துயரம் அள்ளிஎடு
இல்லை யென்றால் சொல்லிவிடு;
நீயே வந்து கொள்ளியிடு